About Us

ஒன்று சேருவோம், மாற்றம் காண்போம்! சிகரங்களை அடைய, சீரிய வழி செல்வோம்!

Welcome to SIGARAM

  • அன்புநிறை பெற்றோரே, அருமை மாணவச் செல்வங்களே!
  • தமிழ்நாட்டின் கிராமப்புறப் பெற்றோரின் மனங்களில் பல கனவுகள் : 'நமது பிள்ளைகள் கலெக்டர்களாக வரமுடியுமா? போலீஸ் அதிகாரிகள் ஆவார்களா அவர்கள்? ஃபாரஸ்ட் ஆபீஸர்களாக, வங்கி அதிகாரிகளாக ஆக முடியுமா?' அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இதே கனவுகள் இருக்கும். தங்கள் பெற்றோரின் ஆசைக் கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் உயர்நிலை அடைய வேண்டுமென பிள்ளைகள் நினைப்பார்கள்.
  • பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்தாலும் திறமைகள் நிறைந்தவர்களாய், செயற்திறனும்-ஆர்வத்துடிப்பும் மிகுந்தவர்களாய் இருப்பவர்கள் ஏராளம். இத்தகைய இளைஞர்கள்-இளம்பெண்களின் ஆசைக் கனவுகள் நிஜமாவதற்கும், அவர்தம் பெற்றோர்களின் இலட்சியங்கள் நிறைவேறுவதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நமக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என ஏங்குகிற பெற்றோருக்கும் – மாணவர்களுக்கும் ஒரு நற்செய்தி: இதோ, சென்னையில் சிகரம் ஐஏஎஸ் பயிற்சி மையம் உருவாகி இருக்கிறது.
  • தமிழ்ச் சமூக வாழ்க்கையில் மூன்று பிரபலமான, வெவ்வேறு துறைகளில் சிகரங்களை எட்டியுள்ளவர்களான வெற்றியாளர்களின் முன்முயற்சியில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் பொருளாதார, சமூகப் பின்னணி எதுவாக இருந்தாலும் உங்களிடம் திறமைகள் இருந்தால், உழைப்பும்-ஆர்வமும் இருந்தால் நீங்களும் கலெக்டராகலாம், போலீஸ் உயரதிகாரியாகலாம்!
  • யார் அந்த மூன்று வெற்றியாளர்கள்?
    திரு.'பரணி' கே.பாலசுப்ரமணி செயலாளர்

    ஒன்பதாண்டு காலம் (1985-1994) அரசு பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். பின் 'பரணி பில்டர்ஸ்' எனும் நிறுவனத்தை தொடங்கி கட்டுமானப்...

    Read More
    திரு.சிவகுமார் தலைவர்

    திரு.சிவகுமார். தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற..

    Read More
    டாக்டர்.பி.சி.துரைசாமி பொருளாளர்

    'சக்தி மசாலா' நிர்வாக இயக்குநர் டாக்டர்.பி.சி.துரைசாமி. உணவுப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் 38 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சக்திமசாலா குழும நிறுவனங்களின்

    Read More